ஹைதராபாத்: தெலுங்கானாவின் முதலாவது முதல்வராக பதவியேற்கும் விழாவுக்கு சீமாந்திராவின் முதல்வர் சந்திரபாபு நாயுடு அழைக்கப்படமாட்டார் என்று கூறப்படுகிறது.
தெலுங்கானா தனி மாநிலத்தின் முதலாவது முதல்வராக ஜூன் 2-ந் தேதி சந்திரசேகர் ராவ் பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழா குறித்து சந்திரசேகர் ராவின் நெருங்கிய சகாவான ராவ் கூறுகையில், தெலுங்கானாவுக்காக உயிர் நீத்த போராளிகளின் குடும்பத்தினரை மட்டும்தான் அழைக்க இருக்கிறோம்.
வேறு எந்த ஒரு தேசிய தலைவரையோ சந்திரபாபு நாயுடுவையோ நாங்கள் அழைக்கவில்லை என்றார்.
இதேபோல் ஜூன் 8-ந் தேதி குண்டூர் அருகே நடைபெறும் பதவியேற்பு விழாவுக்கு சந்திரசேகர் ராவுக்கு சீமாந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் அழைப்பு விடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
தெலுங்கானா தனி மாநிலத்தின் முதலாவது முதல்வராக ஜூன் 2-ந் தேதி சந்திரசேகர் ராவ் பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழா குறித்து சந்திரசேகர் ராவின் நெருங்கிய சகாவான ராவ் கூறுகையில், தெலுங்கானாவுக்காக உயிர் நீத்த போராளிகளின் குடும்பத்தினரை மட்டும்தான் அழைக்க இருக்கிறோம்.
வேறு எந்த ஒரு தேசிய தலைவரையோ சந்திரபாபு நாயுடுவையோ நாங்கள் அழைக்கவில்லை என்றார்.
இதேபோல் ஜூன் 8-ந் தேதி குண்டூர் அருகே நடைபெறும் பதவியேற்பு விழாவுக்கு சந்திரசேகர் ராவுக்கு சீமாந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் அழைப்பு விடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.