You are not connected. Please login or register

Post-#123/6/2014, 10:17 pm

Bharathi

JOIN TODAY

ஆற்றலை அடக்கத்திற்குள் புதைத்து ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் ராம. நாராயணன்: கி. வீரமணி Empty ஆற்றலை அடக்கத்திற்குள் புதைத்து ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் ராம. நாராயணன்: கி. வீரமணி


சென்னை: எல்லோரும் நேசிக்கும் வண்ணம் ஆற்றலை அடக்கத்திற்குள் புதைத்து ஒரு எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்தவர் ராம. நாராயணன் என்று தி.க. தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பிரபல இயக்குநர், தயாரிப்பாளர், கதை, வசனகர்த்தா என்ற பெருமையைப் பெற்று, 25 ஆண்டு காலத்தில் 128 படங்களை உருவாக்கியவர் என்ற பெருமை பெற்றவர் ராம. நாராயணன் அவர்கள் என்பதைவிட, எல்லோரும் நேசிக்கும் வண்ணம் ஆற்றலை அடக்கத்திற்குள் புதைத்து ஒரு எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்தவர் அவர்.

‘‘பெரியார்'' திரைப்படத்தினைத் தயாரித்து வெளிவருவதற்கு ஏராளமான பங்களிப்பை அவர் செய்ததை நாம் நன்றி உணர்வுடன் நினைவு கூர்கிறோம்.

இயல் - இசை - நாடக மன்றத்தின் தலைவராக அவரை, கலைஞர் முதல்வராக இருந்தபோது நியமித்தார்; அதில் முத்தமிழ் வளர்ச்சிக்கு அருமையாகப் பாடுபட்டார். சிறந்த மாமனிதர் அவர். பண்புடன் எவரிடமும் பழகும் மொழி, இன உணர்வாளர். இளைஞர்களைத் தட்டிக் கொடுத்து முன்னுக்கு வருவதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர்.

அவரது மறைவு (சிங்கப்பூர் மருத்துவமனையில், 65 ஆம் வயதில் ஏற்பட்டது) தமிழ்கூறும் நல்லுலகத்திற்கே பெரும் இழப்பாகும்.

அவரது இழப்பால் வாடிடும் அவரது குடும்பத்தினருக்கும், கலைக் குடும்பத்தவர்க்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

View previous topic View next topic Back to top  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum