லக்னோ: நாளுக்கு நாள் உத்தரப்பிரதேசத்தில் குற்றங்கள் பெருகிக் கொண்டே வருவதால் அங்கு உடனடியாக குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் மாயாவதி.
நேற்று உத்தர பிரதேசத்தில் இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு கொலை செய்யப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் மாயாவதி, இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், அகிலேஷ் அரசின் மோசமான நிர்வாகத்தால் மாநிலம் முழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள மாயாவதி, மாநிலத்தில் காட்டு தர்பார் நடப்பதாக கூறியுள்ளார்.
அதே போல், நாள்தோறும் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இதனால் அங்கு உடனடியாக குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார் மாயாவதி.
நேற்று உத்தர பிரதேசத்தில் இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு கொலை செய்யப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் மாயாவதி, இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், அகிலேஷ் அரசின் மோசமான நிர்வாகத்தால் மாநிலம் முழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள மாயாவதி, மாநிலத்தில் காட்டு தர்பார் நடப்பதாக கூறியுள்ளார்.
அதே போல், நாள்தோறும் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இதனால் அங்கு உடனடியாக குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார் மாயாவதி.