You are not connected. Please login or register

Post-#12/6/2014, 7:19 am

Aditya Sundar

JOIN TODAY

மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: யாகூப் மேமனின் தூக்கை நிறைவேற்ற சுப்ரீம் கோர்ட் தடை! Empty மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: யாகூப் மேமனின் தூக்கை நிறைவேற்ற சுப்ரீம் கோர்ட் தடை!


டெல்லி: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளி யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தூக்கு தண்டனைக்கு எதிரான மேமனின் மனுவை அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

1993ஆம் ஆண்டு நிழல் உலக தாதா தாவூத் கும்பல் மும்பையை நாசம் செய்ய தொடர் குண்டுவெடிப்புகளை அரங்கேற்றியது. இதில் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர்.

இந்த வழக்கில் யாசிப் அப்துல் ரஸ்சக் மேமனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. தலைமறைவாக உள்ள நிழல் உலக தாதா டைகர் மேமனின் சகோதரர்தான் யாகூப் மேமன்.

தமக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி யாகூப் மேமன், ஜனாதிபதியிடன் கருணை மனு அளித்திருந்தார். தற்போது யாகூப் மேமன் நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிர அரசுடன் கலந்த ஆலோசித்த அண்மையில் ஜனாதிபதியால் இந்த கருணை மனு நிராகரிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதை எதிர்த்து யாகூப் மேமன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், யாகூப் மேமனின் தூக்கை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்தது. அத்துடன் இந்த மனுவை அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

View previous topic View next topic Back to top  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum