You are not connected. Please login or register

Post-#111/6/2014, 7:23 am

Aditya Sundar

JOIN TODAY

பியாஸ் ஆற்றில் அடித்துச் செல்லப்படும் முன்பு 4 பேரை காப்பாற்றிய மாணவர் கிரண் குமார் Empty பியாஸ் ஆற்றில் அடித்துச் செல்லப்படும் முன்பு 4 பேரை காப்பாற்றிய மாணவர் கிரண் குமார்


ஹைதராபாத்: இமாச்சல பிரதேசத்தில் பிாயஸ் ஆற்றில் அடித்துச் செல்லப்படும் முன்பு மாணவர் கிரண் குமார் 4 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளார்.

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள விஎன்ஆர் விஞ்ஞான ஜோதி இன்ஸ்டிடியூட் ஆப் என்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி கல்லூரியைச் சேர்ந்த 50 மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் இமாச்சல பிரசேத்தில் உள்ள மனாலிக்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மாண்டி மாவட்டம் குல்லு என்ற இடத்தில் பியாஸ் நதியின் அழகை ரசித்தனர்.

அப்போது லார்ஜி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 6 மாணவிகள் மற்றும் 18 மாணவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். அதில் 2 மாணவிகள் உள்பட 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஆற்றின் நடுவே உள்ள பாறையில் நின்று மாணவ, மாணவியர் புகைப்படம் எடுத்தபோது ஏதோ விபரீதம் நடக்கப் போவதை மாணவர் கிரண் குமார் என்பவர் உணர்ந்துள்ளார்.

ஆற்றில் திடீர் என்று வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை பார்த்த கிரண் உடனடியாக மாணவி பிரதியுஷா உள்ளிட்ட 4 பேரை கரை சேர்த்துள்ளார்.

4 பேரின் உயிரை காப்பாற்றிய கிரண் கரை ஏறும் முன்பு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

தெலுங்கானாவில் உள்ள கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த கிரண் குமாரின் தந்தை வெங்கட்ரமணா தனது மகன் உ.யிருடன் வருவார் என்று நம்பிக்கையுடன் உள்ளார். தனது மகனுக்கு நன்றாக நீச்சல் தெரியும் என்பதால் அவர் நிச்சயம் நீந்தி கரை சேர்ந்திருப்பார் என்று நம்புகிறார்.

கிரண் குமார் உயிருடன் ஊர் திரும்ப வேண்டும் என்று அவரது குடும்பத்தார், நண்பர்கள் என்று ஏராளமானோர் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

View previous topic View next topic Back to top  Message [Page 1 of 1]

Similar topics

+

Permissions in this forum:
You cannot reply to topics in this forum